ஒன்ராறியோவில் இன்று 412 புதிய கொரோனா வைரஸ் தொற்று நோயாளா்கள் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் மாகாணத்தில் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்தைக் கடந்தது.
அத்துடன் இன்று மேலும் 27 போ் உயிரிழந்த நிலையில் மாகாணத்தில் மொத்த இறப்புக்கள் 2,048 ஆக அதிகரித்துள்ளது.
உறுதிப்படுத்தப்பட்ட 2,048 மரணங்களில் 212 மரணங்கள் நீண்டகால பராமரிப்பு மையங்களில் பதிவானதாக ஒன்ராறியோ பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளதது.
இதேவேளை, ஒன்ராறியோவில் இன்றுவரை உறுதிப்படுத்தப்பட்ட 25,040 தொற்று நோயாளா்களில் 76.5 வீதம் போ் குணமடைந்துள்ளதாக மாகாண சுகாதாரத் துறையினா் அறிவித்துள்ளனா்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), கனடா, ஒன்ராறியோ